கிரீன்லாந்து, கனடாவை அடுத்து ஆசிய நாடொன்றை இலக்கு வைத்த ட்ரம்ப்: கசிந்த இராணுவக் கோப்புகள்

2 Min Read

வியட்நாம் நாடு அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் மேற்கொள்ளவிருக்கும் இரண்டாவது படையெடுப்பிற்குத் தன்னைத் தயார்படுத்தி வருவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

வியட்நாம் மறுத்தவுடன்

இந்த விவகாரம் தொடர்பில் கசிந்த வியட்நாம் இராணுவக் கோப்புகளில், பிராந்தியத்தில் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு சூழ்ச்சியாக அமெரிக்கா சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை ஊக்குவிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரீன்லாந்து, கனடாவை அடுத்து ஆசிய நாடொன்றை இலக்கு வைத்த ட்ரம்ப்: கசிந்த இராணுவக் கோப்புகள் | Vietnam Fear Second Us Invasion

வியட்நாம் போர் முடிவுக்கு வந்து 50 ஆண்டுகளுக்கும் மேல் கடந்துள்ள நிலையில், கிரீன்லாந்து மீது இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என ட்ரம்ப் அச்சுறுத்திய சில வாரங்களில், வியட்நாம் இராணுவத்தின் இந்த ஆவணங்கள் கசிந்துள்ளது.

இந்த ஆவணங்கள், அமெரிக்க நிர்வாகத்தின் நோக்கங்கள் குறித்து வியட்நாம் இராணுவம் ஆழ்ந்த சந்தேகம் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. மேலும் சீனாவை சுற்றி வளைத்து கட்டுப்படுத்தும் தங்கள் திட்டத்தில் சேர வியட்நாம் மறுத்தவுடன் தாக்குதலுக்கு உத்தரவிடப்படும் என்ற அச்சமும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வியட்நாம் மீது Tomahawk ஏவுகணை, ட்ரோன்கள், கடற்படை தாக்குதல் மற்றும் ஹெலிகொப்டர் ஊடுருவல் என விரிவான நடவடிக்கை ஒன்று எடுக்கப்படலாம் என்றே அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தப் படையெடுப்பு தோல்வியடைந்தால், அமெரிக்கா வியட்நாமுக்கு எதிராக உயிரியல் இரசாயன மற்றும் தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும் என்றும் அதில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வியட்நாமுக்கு எதிராக ஒரு போர் ஏற்படுவதற்கான ஆபத்து குறைவாக இருந்தாலும், அமெரிக்காவின் போர்க்குணமிக்க இயல்பு காரணமாக, நமது நாட்டிற்கு எதிராக ஒரு ஆக்கிரமிப்புப் போரைத் தொடங்குவதற்காக அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஒரு சாக்குப்போக்கை உருவாக்குவதைத் தடுப்பதற்கு நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

கிரீன்லாந்து, கனடாவை அடுத்து ஆசிய நாடொன்றை இலக்கு வைத்த ட்ரம்ப்: கசிந்த இராணுவக் கோப்புகள் | Vietnam Fear Second Us Invasion

அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும், தங்கள் கடற்படையின் மேலான பலத்தைப் பயன்படுத்தி, வியட்நாமின் பரந்த கடல்கள் மற்றும் நீண்ட கடற்கரைகளின் புவியியல் மற்றும் இயற்கை அம்சங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு, நமது நாட்டிற்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடும்.

அச்சங்கள் நியாயமானவை

மேலும், இத்தகைய எதிர்பாராத சூழ்நிலைகளுக்குத் தயாராவதற்காக, வியட்நாமின் இராணுவம் தனது போர் திட்டங்களைத் திருத்தி அமைக்குமாறு வலியுறுத்தி அந்த ஆவணம் நிறைவடைகிறது.

குறித்த ஆவணங்களை வெளியிட்ட அமைப்பானது, இப்படியான ஆவணம் உருவாக்கப்பட்டதை ரகசியமாக உறுதியும் செய்துள்ளது. வியட்நாம் மீது அமெரிக்கா படையெடுக்கும் என்ற எண்ணம் சிலருக்கு அபத்தமாகத் தோன்றலாம், ஆனால் அந்த அச்சங்கள் முற்றிலும் நியாயமானவை என்றும் இந்த ஆவணங்களை வெளியிட்டுள்ள அமைப்பின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கிரீன்லாந்து, கனடாவை அடுத்து ஆசிய நாடொன்றை இலக்கு வைத்த ட்ரம்ப்: கசிந்த இராணுவக் கோப்புகள் | Vietnam Fear Second Us Invasion

13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட வியட்நாம் போருக்குப் பிறகு, அமெரிக்கா-வியட்நாம் உறவுகள் படிப்படியாக நெருக்கமடைந்துள்ளன. பைடன் ஜனாதிபதி பதவிக் காலத்தில், இரு நாடுகளும் தங்கள் உறவுகளை ஒரு விரிவான மூலோபாய கூட்டாண்மை நிலைக்கு உயர்த்தியுள்ளன.

ரஷ்யா மற்றும் சீனா தொடர்பான தேசிய பாதுகாப்பு கவலைகளைக் காரணம் காட்டி, கிரீன்லாந்தின் மீது அமெரிக்கக் கட்டுப்பாட்டைக் கோரிய ட்ரம்ப்பின் அழைப்பால் ஆர்க்டிக் பிராந்தியத்தில் பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்தத் தகவல் கசிவு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *