Su-57 போர் விமானம், S-400 மற்றும் S-500 ஏவுகணகள் தொடர்பில் ரஷ்யா எடுத்துள்ள முடிவு இந்தியாவிற்கு நிம்மதி அளிக்கும் செய்தியாக உள்ளது.
ரஷ்யா, தனது Su-57 ஸ்டெல்த் போர் விமானம் மற்றும் S-400/S-500 ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளுக்கான microwave microchips உற்பத்தியை உள்நாட்டிலேயே தொடங்கவுள்ளது.
Sverdlovsk Oblast மாநில ஆளுநர் Denis Pasler, 2027-க்குள் முழுமையான உற்பத்தி திறன் கொண்ட புதிய தொழிற்சாலை செயல்படத் தொடங்கும் என அறிவித்துள்ளார்.
இந்த மைக்ரோசிப்புகள், ரேடார், செயற்கைக்கோள் தொடர்பு, ட்ரோன், உயர் வேக தரவு செயலாக்கம் போன்ற துறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Su-57 விமானத்தின் Byelka AESA ரேடார் மற்றும் S-400/S-500-இன் Yenisei ரேடார் ஆகியவை இத்தகைய சிப்புகளை பெரிதும் சார்ந்துள்ளன.
மேற்கத்திய தடைகள் காரணமாக, ரஷ்யா சில காலம் சீனாவை சார்ந்திருந்தது என்ற ஊகங்கள் இருந்தன. ஆனால், புதிய உள்நாட்டு உற்பத்தி திட்டம் மூலம், ரஷ்யா சீனாவை சார்ந்திருக்கும் நிலையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் இந்த முடிவு, இந்தியாவிற்கு மிக முக்கியமானது. ஏனெனில், இந்தியா ஏற்கனவே மூன்று S-400 அமைப்புகளை இயக்குகிறது மற்றும் எதிர்காலத்தில் Su-57 போர் விமானங்களை வாங்கும் திட்டம் உள்ளது.
ரஷ்யாவின் புதிய உற்பத்தி திறன் காரணமாக, இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள் சீனா வழங்கும் சிப்களால் பாதிக்கப்படாது.
மேலும், இந்தியா தனது India Semiconductor Mission (ISM) மூலம் MMIC உற்பத்தி திறனை மேம்படுத்தும் முயற்சியில் உள்ளது. இதனால், எதிர்காலத்தில் இந்தியா தன்னிச்சையாகவே இத்தகைய சிப்புகளை உற்பத்தி செய்யும் திறனை பெறும்.




