இலங்கையில் வாக்காளர் இடாப்பு மீளாய்வு பணிகளை அந்நாட்டு தேர்தல் திணைக்களம் மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்த வாக்காளர் இடாப்பு மீளாய்வு பணிகள் நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்று தகுதியுள்ள அனைத்து பொதுமக்களும் தங்கள் வாக்குரிமையை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.
நேற்று இந்த வருடாந்திர வாக்காளர் இடாப்பு மீளாய்வுப் பணிகள் தொடங்கியுள்ளது.

தேர்தல் திணைக்களப் பணியாளர்கள் மற்றும் கிராம் அதிகாரிகள் ஒவ்வொரு வீடு வீடாக சென்று இந்த மீளாய்வு விவரங்களை திரட்டி வருகின்றனர்.




