ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே கண்டுபிடிக்கப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான ‘பாக்தாத் பேட்டரி’ குறித்து புதிய ஆய்வுகள் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன.
இந்த சாதனம், களிமண் பானை, செம்புக் குழாய், இரும்புக் கம்பி ஆகியவற்றால் ஆனது.
முதலில் கண்டுபிடிக்கப்பட்டபோது, இது மதச்சடங்கு பொருள் அல்லது சுருள் சேமிப்பு கருவி என கருதப்பட்டது.
ஆனால் சமீபத்திய பரிசோதனைகள், இந்த அமைப்பு 1.4 வோல்ட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடியது என நிரூபித்துள்ளன.

ஆய்வாளர் அலெக்சாண்டர் பாசஸ், “இரும்புக் கம்பி செம்புக் குழாயைத் தொடாமல் உள்ளே வைக்கப்பட்டுள்ளது. மேலே பிசின் பூசப்பட்டிருப்பதால் திரவம் உள்ளே நிலைத்திருக்கிறது. இது சாதாரண சேமிப்பு கருவி அல்ல, மின்சார வினை நிகழும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது” எனக் கூறியுள்ளார்.
20-ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்ட ஆரம்ப பரிசோதனைகள் குறைந்த மின்னழுத்தத்தையே காட்டியதால், பலர் இதை பேட்டரி என கருதவில்லை.
ஆனால் புதிய ஆய்வுகள், களிமண் பானையும் இரசாயன வினையில் பங்கு வகித்திருப்பதாக சுட்டிக்காட்டுகின்றன. இதனால், இரண்டு மின்கலங்கள் இணைந்து அதிக வோல்டேஜ் உற்பத்தி செய்திருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த சாதனம், உலோக மேற்பரப்பை மாற்றுதல், நிறமாற்றம், வாயு குமிழிகள் உருவாகுதல் போன்ற விளைவுகளை ஏற்படுத்தியிருக்கலாம். இதனால், பழங்கால மக்கள் மின்சாரத்தின் அடிப்படை விளைவுகளை உணர்ந்திருக்க வாய்ப்பு உள்ளது.
இதேபோன்ற பானைகள் ஈராக் பகுதிகளில் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது, அந்தக் காலத்தில் மின்சார தொழில்நுட்பம் குறித்த ஒரு நடைமுறை அறிவு இருந்திருக்கலாம் என்பதைக் காட்டுகிறது.
ஆயினும், சிலர் இதை மதச்சடங்கு கருவி அல்லது உலோக வேலைப்பாடுகளுக்கான கருவி எனவும் கருதுகின்றனர். ‘பாக்தாத் பேட்டரி’ குறித்து சரியான விளக்கம் இன்னும் உறுதியாகவில்லை.




