சீனாவுடனான மோதலுக்கு அஞ்சி… மீனவர்களை அறிவுறுத்திய ஜப்பான்

2 Min Read

சீனாவுடனான ஒரு மோதல் போக்கைத் தவிர்க்க, ஜப்பானால் சென்காகு என்றும் சீனாவால் தியாயு என்றும் அழைக்கப்படும் தீவுப் பகுதிகளைத் தவிர்க்குமாறு ஜப்பானிய அதிகாரிகள் மீனவர்களை வலியுறுத்தி வருகின்றனர்.

பதற்றமான இடமாக

கடந்த பல ஆண்டுகளாக ஜப்பான் நிர்வாகம் சென்காகு தீவுப்பகுதியை அணுகுவதை மௌனமாக ஏற்றுக்கொண்டிருந்த நிலையில், தற்போதைய இந்த கோரிக்கைகள் ஒரு திடீர் மாற்றத்தைக் குறிப்பதகாவே பார்க்கப்படுகிறது.

சீனாவுடனான மோதலுக்கு அஞ்சி... மீனவர்களை அறிவுறுத்திய ஜப்பான் | Japan Asks Fishermen Avoid Islands

சில மீனவர்கள் இந்தத் தீவுகளின் மீதும் அதைச் சுற்றியுள்ள கடல்கள் மீதும் ஜப்பானின் கட்டுப்பாட்டை நிலைநாட்டுவதற்கான ஒரு வழியாக இந்தப் பயணங்களைப் பயன்படுத்தி வந்தனர்.

ஜப்பானால் நிர்வகிக்கப்படும், ஆனால் சீனாவாலும் உரிமை கோரப்படும் அந்தத் தீவுகள், இந்த இரண்டு ஆசிய வல்லரசுகளுக்கும் இடையிலான உறவுகளில் நீண்ட காலமாக ஒரு பதற்றமான இடமாக இருந்து வருகின்றன.

மட்டுமின்றி, தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தினால் ஜப்பான் எவ்வாறு பதிலளிக்கும் என்பது குறித்து பிரதமர் சனே தகைச்சி நவம்பர் மாதம் கருத்து தெரிவித்ததிலிருந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன.

இந்த நிலையில், நவம்பர் மாதத்தின் பிற்பகுதியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தீவிர தேசியவாதியான தகைச்சியிடம், பதட்டங்களை மேலும் தூண்டிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

மீனவர்களுக்கான வேண்டுகோள்கள் தகைச்சியால் உத்தரவிடப்பட்டதா அல்லது ஜப்பானின் பாதுகாப்பு ஆதரவாளரான அமெரிக்காவின் கோரிக்கையுடன் தொடர்புடையதா என்பதில் உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை.

ஆனால், இந்தத் தீவுகள் ஜப்பானின் உள்ளார்ந்த பகுதி என்றும், சீன ஊடுருவல்கள் குறித்து பலமுறை தூதரக எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வலதுசாரி ஜப்பானியர்கள்

இதனிடையே, சீனாவின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவிக்கையில், சில வலதுசாரி ஜப்பானியர்கள் மீன்பிடித்தல் என்ற பெயரில் தீவுப்பகுதிகளில் மீண்டும் மீண்டும் நுழைந்து வன்முறை மற்றும் பிரச்சனையை ஏற்படுத்துவதாக கூறியது, கடல்சார் பிரச்சினைகளை உரையாடல் மற்றும் ஆலோசனை மூலம் தீர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

மீன்பிடித்தல் நீண்ட காலமாகவே அந்த தீவுகளுடன் தொடர்புடையது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜப்பான் முதன்முதலில் அந்தத் தீவுகளைக் கைப்பற்றிய பிறகு, 1930 களில் கைவிடப்படும் வரை, பிரதான உட்சூரி தீவில் ஒரு ஸ்கிப்ஜாக் டுனா பதப்படுத்தும் தொழிற்சாலை நிறுவப்பட்டது.

சீனாவுடனான மோதலுக்கு அஞ்சி... மீனவர்களை அறிவுறுத்திய ஜப்பான் | Japan Asks Fishermen Avoid Islands

1977 ஆம் ஆண்டில், ஜப்பானிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆராய்ச்சி அறிக்கையின்படி, தீவுகளுக்கு குறைந்தது 164 ஜப்பானிய மீன்பிடி பயணங்கள் நடந்தன.

கடந்த ஆண்டு, ஜப்பானிய மீன்பிடி பயணங்கள் எட்டு என்றே ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இது 2024 இல் 18 ஆக இருந்தது என்று ஜப்பான் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *