SA20 கிரிக்கெட் தொடர்: 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி

1 Min Read

SA20 கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தியுள்ளது.

3வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்ற சன்ரைசர்ஸ்

2025 – 2026  SA 20 கிரிக்கெட் தொடரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்  கேப் அணிகள் மோதின.

இந்த போட்டியில் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங்கள் குவித்தது.

அந்த அணியின் நட்சத்திர வீரர் டிவால்ட் பிரெவிஸ் அதிரடியாக விளையாடி 56 பந்துகளில் 101 ஓட்டங்கள் குவித்தார்.

இதையடுத்து 159 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 19.2 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

5 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சன்ரைசர்ஸ் அணி மேதிவ் 68 ஓட்டமும், ஸ்டப்ஸ் 63 ஓட்டமும் குவித்து சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்  அணியை 3வது முறையாக சாம்பியன்ஸ் பட்டம் வெல்ல வழிவகுத்தனர்.

SA20 கிரிக்கெட் தொடர்: 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி | Sunrises Eastern Cape Won 3Rd Sat20 Title

காவ்யா மாறன் கொண்டாட்டம்

சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்  கேப் அணியின் வெற்றி உறுதியானதை அடுத்து அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்.

மேலும் தன்னுடைய அணி மூன்றாவது முறையாக பட்டம் வென்றதை அடுத்து அதை குறிக்கும் வகையில் 3 விரல்களைக் காட்டி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *