508 மீற்றர் உயரம் கொண்ட கோபுரத்தை எந்த பாதுகாப்பும் இல்லாமல் ஏறி அமெரிக்கர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த பாறை ஏறுபவர் அலெக்ஸ் ஹொன்னால்டு (Alex Honnold), தைவானின் புகழ்பெற்ற ‘Taipei 101’ கோபுரத்தை (508 மீட்டர்) எந்த பாதுகாப்பு கயிறும் இல்லாமல் ஏறி உலகை அதிர்ச்சியடைய வைத்தார்.
தைவான் தலைநகரான தைபேவில் ஜனவரி 25, 2026 அன்று நடைபெற்ற இந்த நிகழ்வு, Netflix மூலம் நேரடி ஒளிபரப்பாக உலகம் முழுவதும் பார்வையாளர்களை கவர்ந்தது.’
சுமார் 90 நிமிடங்களில், 101 மாடிகள் கொண்ட இந்த உயரமான கட்டிடத்தின் உச்சியை அவர் எட்டினார்.

சிகப்பு நிற சட்டை அணிந்திருந்த ஹொன்னால்டு, உச்சியை அடைந்தவுடன் கைகளை உயர்த்தி மக்களுக்கு வணக்கம் தெரிவித்தார். “இது அற்புதமான காட்சி, அழகான நாள். காற்று பலமாக வீசியதால் சமநிலையை காக்க வேண்டியிருந்தது,” என்று அவர் கூறினார்.
யோசமைட் தேசிய பூங்காவின் ‘El Capitan’ பாறையை கயிறு இல்லாமல் ஏறியதற்காக உலகப் புகழ் பெற்ற ஹொன்னால்டு, இப்போது நகரின் அடையாளமாக விளங்கும் தைபே 101-ஐ ஏறியுள்ளார்.
கட்டிடத்தின் நடுப்பகுதியில் உள்ள ‘மூங்கில் பெட்டிகள்’ வடிவமைப்பு மிகவும் கடினமான பகுதியாக இருந்தது. ஒவ்வொரு பகுதியிலும் குறுகிய ஓய்வுகளை எடுத்துக்கொண்டு அவர் மேலே சென்றார்.
இந்த நிகழ்வை காண நூற்றுக்கணக்கான மக்கள் தெருக்களில் கூடியிருந்தனர். அவர்களின் உற்சாகக் குரல்கள் ஹொன்னால்டுக்கு ஊக்கமாக இருந்ததாக அவர் பின்னர் தெரிவித்தார்.
முந்தைய சாதனை
முன்னதாக, 2004-ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பாறை ஏறுபவர் அலேன் ராபர்ட், தைபே 101-ஐ கயிறுடன் ஏறியிருந்தார்.
ஆனால், கயிறு இல்லாமல் ஏறிய முதல் வீரர் ஹொன்னால்டு என்பதால், இந்த சாதனை உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.




