இந்திய ரயில்வேயில் முதல்முறை – பயணிகளின் பாதுகாப்புக்கு ரோபோட்

1 Min Read

இந்திய ரயில்வேயில், பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் முதல்முறையாக மனித வடிவிலான ரோபோட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ASC அர்ஜுன்

இந்திய ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு சிறப்பான பயணத்தை வழங்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், முதல் மனித வடிவிலான ரோபோட்டை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்திய ரயில்வேயில் முதல்முறை - பயணிகளின் பாதுகாப்புக்கு ரோபோட் | Indian Railway Rolls Out Humanoid Robot Asc Arjun

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இந்த ASC அர்ஜுன்(ASC Arjun) என்ற முதல் மனித வடிவிலான ரோபோட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரயில்வே பாதுகாப்புப் படையின் (RPF) கீழ் இயங்க உள்ள இந்த ரோபோட், ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான உதவியை மேம்படுத்துவதோடு, பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்திய ரயில்வேயில் முதல்முறை - பயணிகளின் பாதுகாப்புக்கு ரோபோட் | Indian Railway Rolls Out Humanoid Robot Asc Arjun

ரயில்வே மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் வழிகாட்டுதலின் கீழ் ஆர்.பி.எஃப் குழு ஒரு வருடத்திற்கும் மேலாக, விசாகபட்டினத்தில் வைத்து இந்த ரோபோட்டை உருவாக்கியுள்ளனர்.

எப்படி செயல்படும்?

இந்த ரோபோட், மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு, முகம் அடையாளம் காணும் திறன், இணைய இணைப்பு (IoT) மற்றும் நிகழ்நேர கண்காணிப்பு திறன்களைக் கொண்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *