5 ரன்னுக்கு 2 விக்கெட்! நியூஸிலாந்திற்கு அதிர்ச்சி கொடுத்த அர்ஷ்தீப், ஹர்ஷித்

1 Min Read

இந்திய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

கடைசி ஒருநாள் போட்டி

இந்தூரில் நடந்து வரும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன.

இந்திய அணி நாணய சுழற்சியில் வென்று பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி துடுப்பாட்டத்தை தொடங்கியது.

முக்கிய விக்கெட்டுகள்

அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரின் 4வது பந்தில் ஹென்றி நிக்கோல்ஸ் (0) போல்டாகி வெளியேறினார்.

அடுத்து டெவோன் கான்வே (Devon Conway) 5 ஓட்டங்களில் ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனால் 5 ஓட்டங்களுக்குள்ளாகவே நியூசிலாந்து அணி இரண்டு முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *