நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுக… ஈரானில் உள்ள அமெரிக்கர்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் வலியுறுத்தல்

2 Min Read

ஈரானில் தொடரும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மத்தியில், அங்குள்ள தங்கள் குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

பாதுகாப்பு எச்சரிக்கை

ஈரான் தொடர்பாக அதன் நேச நாடுகளுக்கு 25 சதவீத வரி விதித்த நிலையில், தற்போது அந்த நாட்டின் மீது இராணுவ நடவடிக்கை குறித்தும் ட்ரம்ப் முடிவெடுக்க உள்ளார்.

நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுக... ஈரானில் உள்ள அமெரிக்கர்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் வலியுறுத்தல் | Leave Now Us Tells Citizens In Iran

இந்த நிலையிலேயே, ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுங்கள் என்று ஈரானுக்கான அமெரிக்காவின் மெய்நிகர் தூதரகம் திங்கட்கிழமை வெளியிட்ட பாதுகாப்பு எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.

அத்துடன், அமெரிக்க அரசாங்கத்தின் உதவியின்றி ஈரானிலிருந்து வெளியேறத் திட்டமிடுமாறும் தனது குடிமக்களை அமெரிக்கா வலியுறுத்தியது.

ஈரானில் நாடு தழுவிய போராட்டங்களைக் குறிப்பிட்ட அமெரிக்க நிர்வாகம், அவை தீவிரமடைந்து வருவதாகவும், வன்முறையாக மாறக்கூடும் என்றும், அதன் விளைவாக கைதுகளும் காயங்களும் ஏற்படலாம் என்றும் கூறியது.

ஈரானில் அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள், சாலை மூடல்கள், பொதுப் போக்குவரத்துத் தடங்கல்கள் மற்றும் இணைய முடக்கங்கள் ஆகியவை தொடர்ந்து நீடித்து வருகிறது.

நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுக... ஈரானில் உள்ள அமெரிக்கர்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் வலியுறுத்தல் | Leave Now Us Tells Citizens In Iran

அமெரிக்கக் குடிமக்கள் தொடர்ச்சியான இணையத் தடங்கல்களை எதிர்பார்க்க வேண்டும் என்றும், எனவே மாற்றுத் தகவல் தொடர்பு வழிகளைத் திட்டமிட வேண்டும் என்றும் அந்தப் பாதுகாப்பு எச்சரிக்கை கூறியது.

மேலும், பாதுகாப்பான சூழல்கள் அனுமதித்தால், அமெரிக்க மக்கள் தரைவழி மார்க்கமாக ஆர்மீனியா அல்லது துருக்கிக்குச் செல்லலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது.

நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுக... ஈரானில் உள்ள அமெரிக்கர்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் வலியுறுத்தல் | Leave Now Us Tells Citizens In Iran

கைது செய்வதற்கு

அமெரிக்க-ஈரானிய இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் ஈரானிய கடவுச்சீட்டுகளுடன் மட்டுமே ஈரானிலிருந்து வெளியேற வேண்டும். ஈரானிய அரசாங்கம் இரட்டைக் குடியுரிமையை அங்கீகரிக்கவில்லை, மேலும் அமெரிக்க-ஈரானிய இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களை ஈரானிய குடிமக்களாக மட்டுமே அந்த நிர்வாகம் கருதும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

மட்டுமின்றி, ஈரானில் அமெரிக்கக் குடிமக்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கும், கைது செய்யப்படுவதற்கும், தடுத்து வைக்கப்படுவதற்கும் கணிசமான ஆபத்தில் உள்ளனர்.

நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுக... ஈரானில் உள்ள அமெரிக்கர்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் வலியுறுத்தல் | Leave Now Us Tells Citizens In Iran

அமெரிக்க கடவுச்சீட்டைக் காட்டுவது அல்லது அமெரிக்காவுடனான தொடர்புகளை வெளிப்படுத்துவது, ஈரானிய அதிகாரிகளுக்கு ஒருவரைக் கைது செய்வதற்குப் போதுமான காரணமாக அமையலாம்.

மேலும், நீங்கள் வெளியேற முடிவு செய்தால், அமெரிக்க அரசாங்கத்தால் உங்கள் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. அவ்வாறு செய்வது பாதுகாப்பானது என்று நீங்கள் நம்பினால் மட்டுமே நீங்கள் வெளியேற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

வெளியேற முடியாதவர்கள், பாதுகாப்பான இடத்தைக் கண்டுபிடித்து, உணவு மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் தங்களிடம் இருப்பதை உறுதி செய்துகொள்ளுமாறு தூதரகம் அறிவுறுத்தியது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *