மாஸ்கோ இலக்கு… உக்ரைனின் Nightfall பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பிரித்தானியா

2 Min Read

சுமார் 300 மைல்களுக்கு அப்பால் ரஷ்ய இலக்குகளை அழிக்கும் திறன் கொண்ட உக்ரைனின் Nightfall பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிக்க பிரித்தானியா முடிவு செய்துள்ளது.

இவை மாஸ்கோ வரை

பிரித்தானியா தயாரிக்கவிருக்கும் Nightfall பாலிஸ்டிக் ஏவுகணையில் 200 கிலோ வரையான வெடிபொருட்களைப் பொருத்த முடியும்.

மாஸ்கோ இலக்கு... உக்ரைனின் Nightfall பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பிரித்தானியா | Britain Build Nightfall Missile

மட்டுமின்றி இந்த வகை ஏவுகணைகளை தொடர்ச்சியாக விரைவாகவும் ஏவ முடியும் மற்றும் இவை மாஸ்கோ வரை சென்றடையக்கூடியவை. இது விளாடிமிர் புடினின் படைகளுக்கு எதிரான ஜெலென்ஸ்கியின் தொடர்ச்சியான போராட்டத்தில் ஒரு மதிப்புமிக்க ஆயுதமாக நிரூபிக்கப்படலாம் என்றே கூறுகின்றனர்.

இந்த நிலையில், 9 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ஒரு ஒப்பந்தத்தின் கீழ், முதல் மூன்று சோதனை ஏவுகணைகளை வடிவமைத்து, உருவாக்கி, வழங்குவதற்காக பிரித்தானிய நிறுவனங்களை பாதுகாப்பு அமைச்சகம் தற்போது நாடி வருகிறது.

புதிய இந்த ஏவுகணையின் ஆற்றலைப் பாராட்டிய பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி, தி சன் பத்திரிகையிடம், நீங்கள் பாதுகாப்பு அடுக்குகளைக் கொண்டிருப்பதன் மூலம் உங்கள் நகரங்களைப் பாதுகாக்கிறீர்கள் என்று கூறினார்.

அவர் உக்ரைன் தலைநகரில் இதை தெரிவிக்கும் போது அந்தப் பகுதியில் நடந்த ரஷ்ய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் இருந்து நூலிழையில் தப்பியுள்ளார்; அந்தத் தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

மாஸ்கோ இலக்கு... உக்ரைனின் Nightfall பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பிரித்தானியா | Britain Build Nightfall Missile

அதிநவீன ஆயுதங்களை

உக்ரைனுக்கான ரயில் பயணம் தொடர்பில் பகிர்ந்துகொண்ட ஹீலி, அது ஒரு மோசமான தருணம், மேலும் கடும் குளிரான சூழ்நிலைகளில் உக்ரேனியர்கள் மீது ஏவப்படும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் தாக்குதல்களைப் பற்றிய ஒரு கடுமையான நினைவூட்டலாகவும் அது இருந்தது.

இதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம், உக்ரேனியர்கள் எதிர்த்துப் போராடும் வேளையில், அதிநவீன ஆயுதங்களை அவர்களின் கைகளில் வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றார்.

மாஸ்கோ இலக்கு... உக்ரைனின் Nightfall பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பிரித்தானியா | Britain Build Nightfall Missile

Nightfall ஏவுகணை குறித்து அறிவித்த அதேவேளையில், போர் நிறுத்தம் ஏற்பட்டால் உக்ரைனில் பிரித்தானியாவின் படைகளைக் களமிறக்க 200 மில்லியன் பவுண்டுகள் செலவிட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் பன்னாட்டுப் படைக்கான திட்டங்களைப் பற்றி ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் விவாதிக்க ஜான் ஹீலி உக்ரைனுக்கு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *