துபாயில் கேரள டாக்சி சாரதிக்கு அடித்த அதிர்ஷ்டம்! லொட்டரில் விழுந்த ஜாக்பாட்

1 Min Read

துபாயில் வசிக்கும் இந்திய சாரதி ஒருவர் லொட்டரியில் ரூ.24 லட்சம் ஜாக்பாட் பரிசு வென்றார்.

டாக்சி சாரதி

இந்திய மாநிலம் கேரளாவைச் சேர்ந்த 57 வயது நபர் பஷீர் கைபுரத். இவர் துபாயில் டாக்சி சாரதியாக வேலை பார்த்து வருகிறார். சுமார் 25 ஆண்டுகளாக பஷீர் அங்கு வாழ்கிறார்.

kerala taxi driver win 24 lakhs in dubai lottery

அத்துடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஒவ்வொரு மாதமும் தவறாமல் Big Ticket லொட்டரி சீட்டுகளை வாங்கி வந்துள்ளார்.

இந்த நிலையில், இவர் வாங்கிய 276640 என்ற டிக்கெட் எண்ணின் மூலம் 100,000 திர்ஹாம் ஜாக்பாட் பரிசு வென்றுள்ளார். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.24 லட்சம் ஆகும்.

பிக் டிக்கெட் நிகழ்ச்சித் தொகுப்பாளர் அவரைத் தொடர்புகொண்டு தெரிவித்தபோது பஷீர் அதனை நம்பவில்லை.

ஆரம்பத்தில் திகைத்துப்போன அவர், நான் உண்மையிலேயே வென்றுவிட்டேனா என்று மீண்டும் மீண்டும் கேட்டுள்ளார்.

kerala taxi driver win 24 lakhs in dubai lottery

தற்போது, பரிசுப் பணத்தின் ஒரு பகுதியை இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தினருக்கு ஆதரவளிக்கப் பயன்படுத்த பஷீர் திட்டமிட்டுள்ளார்.

அத்துடன் பொறுமையும், விடாமுயற்சியும் உண்மையாகவே பலனளிக்கும் என்று நம்பி, எதிர்கால குலுக்கல்களிலும் தொடர்ந்து பங்கேற்க விரும்புவதாகவும் கூறுகிறார்.

குறிப்பிடத்தக்க வகையில், பிக் டிக்கெட் என்பது ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகவும் பிரபலமான raffle குலுக்கல்களில் ஒன்றாகும். இது குறிப்பாக பெரிய ரொக்கப் பரிசுகள் மற்றும் சொகுசு கார்களை வழங்குவதற்காக அறியப்படுகிறது.

இந்த குலுக்கலில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தனிநபர்கள் பங்கேற்கலாம். வெற்றியாளர்கள் நேரடியாகத் தொடர்பு கொள்ளப்படுவார்கள் மற்றும் அதிகாரப்பூர்வ தளங்கள் வழியாகப் பொதுவில் அறிவிக்கப்படுவார்கள்.

kerala taxi driver win 24 lakhs in dubai lottery

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *