இலங்கை மகளிர் அணிக்கு எதிரான டி20 போட்டியில், மதுரையைச் சேர்ந்த வீராங்கனை கமலினி அறிமுகமானார்.
Contents
குணாளன் கமலினி
இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடந்தது.
இதில் இந்திய அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
இப்போட்டியில் ஸ்ம்ரிதி மந்தனாவிற்கு பதிலாக குணாளன் கமலினி (Gunalan Kamalini) தொடக்க வீராங்கனையாக களமிறங்கினார்.
முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி
மொத்தம் 12 பந்துகளை எதிர்கொண்ட கமலினி, 2 பவுண்டரிகளுடன் 12 ஓட்டங்கள் எடுத்தார்.
மதுரையைச் சேர்ந்த 17 வயதான கமலினிக்கு இது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஆகும்.
போட்டிக்கு முன்பாக “U-19 சூப்பர் ஸ்டார்” கமலினியை அணிக்கு வரவேற்போம் என்று கூறி அணிதலைவைர் ஹர்மன்ப்ரீத் கவுர் தொப்பி அவரிடம் வழங்கினார்.





