இந்தியாவின் மின்சார வாகன சந்தையில் முக்கியமான மைல்கல்லை Tata Nexon EV எட்டியுள்ளது.
2020-இல் அறிமுகமான இந்த மின்சார SUV, தற்போது 1 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு, இந்தியாவில் இதுவரை அதிகம் விற்பனையான முதல் EV எனும் பெருமையை பெற்றுள்ளது.
வளர்ச்சி பயணம்
Nexon EV அறிமுக காலத்தில் மாதத்திற்கு சுமார் 300 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது.
2025-இல், மாதாந்திர விற்பனை 3,000 யூனிட்கள் வரை உயர்ந்துள்ளது.
Tata Motors, இதுவரை இந்தியாவில் மொத்தம் 2.5 லட்சம் EV விற்பனை சாதனை படைத்துள்ளது.
Nexon EV மட்டும் இந்திய EV சந்தையின் 66 சதவீத பங்கு வகிக்கிறது.
தொழில்நுட்ப முன்னேற்றம்
Nexon EV ஆரம்பத்தில் 230 கி.மீ. ரேஞ்ச் கொண்டிருந்தது. தற்போது 489 கி.மீ. ARAI சான்றளிக்கப்பட்ட ரேஞ்ச் வழங்குகிறது.
45kWh பேட்டரி கொண்ட மேம்பட்ட மொடல், 350 கி.மீ. உண்மையான ரேஞ்சை வழங்குகிறது.
இதிலுள்ள ADAS, Lifetime Battery Warranty போன்ற அம்சங்கள், பயனர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளன.
சார்ஜிங் வசதிகள்
Tata நிறுவனம் நாடு முழுவதும் 2 லட்சம் சார்ஜிங் பாயிண்ட்கள் அமைத்துள்ளது.
20,000-க்கும் மேற்பட்ட பப்ளிக் சார்ஜர்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
100 MegaCharging Hubs முக்கிய நெடுஞ்சாலைகளில் செயல்படுகின்றன. 120kW பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டவை.
இந்த சாதனை, இந்தியாவில் மின்சார வாகனங்கள் வெகுஜன மார்க்கெட் நிலைக்கு வந்துவிட்டதை உறுதிப்படுத்துகிறது. Tata Nexon EV, இந்திய EV புரட்சியின் அடையாளமாக மாறியுள்ளது.




