இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்… விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து

1 Min Read

இந்த டிசம்பரில் தங்கள் பணி அனுமதிகளைப் புதுப்பிக்க நாட்டிற்குத் திரும்பிய நூற்றுக்கணக்கான இந்திய H-1B விசா வைத்திருப்பவர்கள், இந்தியாவில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னறிவிப்பில்லாத

குறித்த விவகாரத்தால், நீண்ட காலம் தங்கியிருக்க நேரிடும் அபாயம் காரணமாக, சில ஊழியர்களை சர்வதேசப் பயணங்களைத் தவிர்க்குமாறு கூகிள் அறிவுறுத்த உள்ளது.

டிசம்பர் 15 மற்றும் 26 ஆகிய திகதிகளுக்கு இடையில் நடந்த இந்த முன்னறிவிப்பில்லாத நடவடிக்கையால் நூற்றுக்கணக்கான, ஒருவேளை ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுவதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், 2025ல் மட்டும் சுமார் 1000 H-1B ஊழியர்களை பணிக்கு அமர்த்தியுள்ள கூகிள் நிறுவனம் அவசர அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

இணையதளச் செயல்பாட்டு

இதனிடையே, மாற்றி அமைக்கப்பட்ட சந்திப்புகள், அமெரிக்காவின் புதிய விசா சரிபார்ப்புக் கொள்கையுடன் தொடர்புடையவை. அந்தக் கொள்கையின் கீழ், முகமைகள் விண்ணப்பதாரரின் சமூக ஊடக பங்களிப்பை ஆய்வு செய்ய இருக்கின்றன என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவிற்கு தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய விண்ணப்பதாரர்களைச் சல்லடை செய்வதற்காகவே இந்த புதிய இணையதளச் செயல்பாட்டு ஆய்வுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியர்களை பொறுத்தமட்டில், அமெரிக்காவின் 70 சதவீத H-1B விசாவில் பணியாற்றுகின்றனர். மேலும், செப்டம்பர் மாதம், ட்ரம்ப் புதிய எச்-1பி விண்ணப்பங்களுக்கு 100,000 டொலர் கட்டணத்தை விதித்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *