‘டிட்வா’ சூறாவளி மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாகத் தமது வீடுகளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இழந்த தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்குப் புதிய வீடுகளை அமைத்துக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 650 சதுர அடி பரப்பளவைக் கொண்ட வீடொன்றை அமைப்பதற்குத் தலா ரூ. 5 இலட்சம் வீதம் அரசாங்கம் நிதி வழங்கும்.

இக்குடும்பங்களுக்குத் தேவையான 10 பேர்ச் காணியைத் தோட்ட நிறுவனங்கள் வழங்கும் அல்லது அரசாங்கம் கொள்வனவு செய்து வழங்கும்.




