இன்று (06) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் கொத்து, ப்ரைட் ரைஸ் மற்றும் சோற்றுப் பொதியின் விலைகள் ரூ. 20 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
அதேநேரம் ஏனைய சிற்றுண்டிகளின் விலைகள் ரூ. 10 இனால் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர்ஹர்சன ருக்ஷன் தெரிவித்துள்ளார். 
தேங்காய் எண்ணெய் விலை குறைவடைந்தமையினால் ஏனைய சிற்றுண்டிகளின் விலைகள் ரூ. 10 இனால் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.




