அமெரிக்காவுக்கு சொந்தமான F-35 ரக போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளது.
ஈரான் – அமெரிக்கா மோதல்
வெள்ளிக்கிழமை மத்திய ஈரான் பகுதியில் இரவு நேர தாக்குதலில் ஈடுபட்ட அமெரிக்காவின் F-35 ரக போர் விமானத்தை ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை வீரர்கள் சுட்டு வீழ்த்தி இருப்பதாக அறிவித்துள்ளது.
ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை, புதிய அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்பின் உதவியுடன் இரண்டாவது முறையாக அமெரிக்காவின் F-35 ரக போர் விமானத்தை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் F-35 ரக போர் விமானத்தை செலுத்திய விமானியின் நிலைமை குறித்து தகவல் எதுவுமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முட்டாள்தனங்களுக்கு இதுதான் தங்களுடைய முதல் பதில் என்று IRGC தெரிவித்துள்ளது.




