காகம் நம் தலையை தட்டிச் செல்வதற்கு என்ன காரணம்?

Karan
By
Karan
3 Min Read

காகம் நம் தலையை தட்டிச் செல்வதற்கு என்ன காரணம்? | Crow Hits You On The Head Is It Bad Luck Signs

காகம் நம் தலையை தட்டிச் செல்வதற்கு என்ன காரணம்?
நாம் அவசரமாக வெளியில் செல்லும் போது நமது தலையில் காகம் தட்டி சென்றால் அதற்கான அர்த்தத்தை தெரிந்துகொள்வது அவசியம்.
காகம்
பெரும்பாலான வீடுகளில் செல்லரப்பிராணியாக வளர்க்கப்படாத ஒரு பறவை என்றால் அது காகம் தான். ஆனால் ஜோதிடத்தில் காகத்தை பற்றி பல சுவாரஷ்ய தகவல்கள் உள்ளது.
சில சமயங்களில் மனிதர்களை விட மிருகங்கள் பறவைகள் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறியும் சக்தி கொண்டவை எனப்படுகின்றது.
அந்த வகையில் நாம் வீதியில் நடந்து செல்லும் போது நமது தலையில் காகம் தட்டிவிட்டு பறந்து செல்லும்.
அப்படி பறந்து செல்தும் போது எப்போதாவது காகம் தலையில் தட்டி செல்ல காரணம் என்ன என்பதை யோசித்து உள்ளீர்களா? இதற்கு வேத சாஸ்திரத்தில் ஒரு சுவாரஷ்ய விளக்கம் கூறப்பட்டுள்ளது.
வேதசாஸ்திரத்தில் நமது முன்னோர்களை நாம் வணங்க மறந்தாலோ அல்லது நம் முன்னோர்களுக்கு உரிய காலத்தில் திதி கொடுக்க மறந்தாலோ அவர்கள் நம்மை காகத்தின் வடிவில் தேடி வருகின்றனர் என அர்த்தம் எனப்படகின்றது.
மேலும் காகம் தட்டினால் அது சனி தோஷம் என்றெல்லாம் சொல்வார்கள் ஆனால் இல்லை. இது தவிர நாம் வெளியில் செல்லும் போது தண்ணீர் காகம் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தால் நமக்கு ஏதாவது ஒரு சுபநிகழ்ச்சி தேடி வரப்போகின்றது என்று அர்த்தமாம்.
காலையில் வீட்டின் கிழக்கில் காகம் கரைவதை பார்த்தால், அதுவும் நல்லது. ஒரு நபர் காகத்திற்கு உணவளித்தால், காகம் அவரது கண்களுக்கு முன்பாக சாப்பிட ஆரம்பித்தால் இது ஒரு நல்ல அறிகுறியாக கருதப்படுகின்றது.
இந்த காரணத்தினால் மனதின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என கூறப்படுகின்றது. ஒரு முக்கிய வேலைக்கு செல்லும் போது காகம் தென்பட்டால் அதுவும் நல்ல அறிகுறி எனப்படுகின்றது.
இதனால் நமது நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் எனப்படுகின்றது. நண்பகல் வேளையில் வீட்டின் வடக்கே காக்கைகளை அழைப்பது மங்களகரமானது எனப்படுகின்றது.
நீங்கள் வேலை விஷயமாக செல்லும் போது வீட்டிற்கு அருகில் அல்லது வாசலில் காகம் கரைந்துகொண்டிருந்தால் உங்கள் வேலை சம்பந்தமான விடயங்கள் நல்லபடியாக முடியும் எனப்படுகின்றது.
ஏதாவது ஆறு, குளங்களில் நீராடி விட்டு, பிறகு முழு பயபக்தியுடன் சனி பகவானின் கோயிலுக்கு சென்று எள் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இப்படி செய்தால் சனிபகவானின் ஆசி கிடைக்கும் எனப்படுகின்றது.
வீட்டில் நல்லபடியாக சமைத்து நிங்கள் சாப்பிட முன்னர் காகத்திற்கு உணவளியுங்கள். காகம் தலையில் தட்டி அடுத்து வரும் அம்மாவாசை நாளில் முன்னோர்களுக்கு முழு படையில் போட்டு அவர்களை மனதார வழிபாடு செய்து பிறருக்கு உதவி செய்ய வேண்டும்.
காகத்தை பற்றிய சாஸ்திர உண்மை
காகத்திற்கு உணவளிக்கும் போது காகம் நீங்கள் பார்த்திருக்கும் போதே சாப்பிட்டால் அது நல்ல அறிகுறி என்று சொல்லப்படுகின்றது. அப்படி இல்லாமல் காகம் அந்த உணவை சாப்பிடவிலை என்றால் அது கெட்ட சகுனம் எனப்படுகின்றது.
காகம் நமது உணவை சாப்பிட்டால் நமது அனைத்து ஆசைகளும் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது. வீதியில் நடந்து செல்லும் போது, காகம் தண்ணீர் குடித்தால் நீங்கள் நிறைய பணம் சம்பாதிப்பீர்கள் என்று கூறப்படுகின்றது.
வீட்டின் கிழக்கில் காலை வேளையில் காகம் கரைவதை பார்ப்பது சுபமாகும்.
நீங்கள் வேலைக்கு செல்லும் போது காகத்தை பார்த்தால் அது நல்ல அறிகுறி என்று சொல்லப்படுகின்றது. அந்த நாளில் நீங்கள் செய்யும் வேலைகள் அனைத்தும் சுபமாக முடியும் எனப்படுகின்றது.
காகம் நம் தலையை தட்டிச் செல்வதற்கு என்ன காரணம்? | Crow Hits You On The Head Is It Bad Luck Signs
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *