ஈரானுக்குள் அமெரிக்க இராணுவம் நுழைந்ததும்… மூடப்படும் அபாயத்தில் இன்னொரு நீரிணை

2 Min Read

ஈரானுக்குள் பல வாரங்கள் நீடிக்கும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஹார்முஸ் போன்று இன்னொரு முக்கியமான நீரிணையும் முடக்கப்படும் ஆபத்து உருவாகியுள்ளது.

கடுமையான இடையூறாக

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அனைவரின் கவனமும் தற்போது தெற்கு நோக்கி, செங்கடலில் அமைந்துள்ள மற்றொரு குறுகிய நீர்ப்பகுதியான பாப்-எல்-மண்டேப் நீரிணையின் பக்கம் திரும்பியுள்ளது.

ஈரானுக்குள் அமெரிக்க இராணுவம் நுழைந்ததும்... மூடப்படும் அபாயத்தில் இன்னொரு நீரிணை | Bab El Mandeb Strait Iran War

செங்கடலின் தென்முனையில் அமைந்துள்ள இந்த நீரிணை முடக்கப்பட்டால், நவீன வரலாற்றிலேயே உலக எரிசக்திச் சந்தைகளுக்கு ஏற்படவிருக்கும் மிகக் கடுமையான இடையூறாக இருக்கும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

ஈரான் போரில் ஒரு மாதத்திற்கு பிறகு களத்தில் குதித்துள்ள ஹவுதிகளால், தற்போது மிக மோசமான பாதிப்புகள் ஏற்படலாம் என்றே கூறுகின்றனர். ஹவுதிகள் கட்டுப்பாட்டிலேயே இந்த நீரிணை உள்ளது.

ஹார்முஸ் நீரிணை ஒரு பெரிய எண்ணெய் சார்ந்த அதிர்ச்சிப் புள்ளி என்றால் பாப்-எல்-மண்டேப் நீரிணை என்பது மிகப்பெரிய அளவிலான வர்த்தகம் சார்ந்த அதிர்ச்சிப் புள்ளி என்றே குறிப்பிடுகின்றனர்.

ஈரானுக்குள் அமெரிக்க இராணுவம் நுழைந்ததும்... மூடப்படும் அபாயத்தில் இன்னொரு நீரிணை | Bab El Mandeb Strait Iran War

ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டால்

உலகளாவிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதிகளில் சுமார் 10 முதல் 12 சதவீதம் வரை பாப்-எல்-மண்டப் வழியாகச் செல்கின்றன. ஆனால், ஹவுதிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த நீரிணை முடக்கப்படுவதாக அறிவிக்க வேண்டியதில்லை என்றும், ட்ரோன் அல்லது ஏவுகணை அச்சுறுத்தல் இருப்பதாக கசியவிடும் தகவல்களே கப்பல் போக்குவரத்தை முழுமையாக முடக்கிவிடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

இரண்டு நீரிணையும் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டால், அதன் விளைவுகள் எண்ணெய்த் துறைக்கு அப்பாலும் விரிவடைந்து, மிக விரிவான கடல்சார் வர்த்தக இடையூறுப் பிரச்சினையாக உருவெடுக்கும் என்கிறார்கள்.

ஈரானுக்குள் அமெரிக்க இராணுவம் நுழைந்ததும்... மூடப்படும் அபாயத்தில் இன்னொரு நீரிணை | Bab El Mandeb Strait Iran War

இதனிடையே, ஈரான் மீதான எந்தவொரு நெருக்கடியும் அதற்கேற்ற பதிலடியை அளிக்கத் தூண்டும் என அந்த நாட்டின் இராணுவ அதிகாரி ஒருவர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனால், அமெரிக்கா தற்போது தரைப்படையை ஈரானில் களமிறக்கும் என்றால், ஈரானின் அடுத்த நகர்வு பாப்-எல்-மண்டேப் நீரிணையை முடக்குவதாக இருக்கும் என்பதுடன், ஈரான் ஆதரவு ஹவுதிகள் மற்றும் ஹிஸ்புல்லா படைகளும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக போரிடும் மிக மோசமான சூழல் உருவாகும் என்றே கூறுகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *