ஈரான், இஸ்ரேல் மீது 83வது முறையாக ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில், ஏவுகணைகளில் “இந்திய மக்களுக்கு நன்றி” எனும் வாசகம் எழுதப்பட்டிருந்தது.
இதேபோல் ஜேர்மனி, பாகிஸ்தான், ஸ்பெயின் ஆகிய நாடுகளின் மக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் செய்திகள் ஏவுகணைகளில் இடம்பெற்றிருந்தன.
ஈரான் வான்வழி படையினர், ஏவுகணைகளை ஏவுவதற்கு முன் கையால் இந்த வாசகங்களை எழுதிய காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவின.

நீண்ட மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் இஸ்ரேல் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்க படைகள் பயன்படுத்தும் தளங்கள் தாக்கப்பட்டதாக இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) தெரிவித்துள்ளது.
பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் Patriot ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் பராமரிப்பு மையமும் தாக்குதலுக்குள்ளானதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்தன.
இதற்கிடையில், ஈரான் “நட்பு நாடுகள்” எனக் குறிப்பிட்ட இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, சீனா, ஈராக், வங்காளதேசம் ஆகிய நாடுகளுக்கு ஹார்முஸ் நீரிணை வழியாக போக்குவரத்து அனுமதி வழங்கியதாக அறிவித்துள்ளது.
இந்த தாக்குதலின் போது, அபுதாபியில் ஏவுகணை சிதைவுகள் விழுந்ததில், ஒருவர் உயிரிழந்தார், மேலும் ஒருவர் காயமடைந்தார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஷியா சமூகத்தினர் ஈரானுக்கு ஆதரவாக நிதி, நகைகள், வீட்டுப் பொருட்கள், கால்நடைகள் போன்றவற்றை தானமாக வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




