அமெரிக்காவில் 1861-க்கு பிறகு முதல்முறையாக, தற்போதைய ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் கையொப்பம் டொலர் நோட்டில் இடம்பெறவுள்ளது.
அமெரிக்காவின் 250-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, நிதி அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புதிய டொலர் நோட்டுகளில், நிதி செயலாளர் ஸ்காட் பெசன்டின் கையொப்பத்துடன், ட்ரம்பின் கையொப்பம் இடம்பெறும்.
இதன் மூலம், அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக பதவியில் இருக்கும் ஒரு ஜனாதிபதியின் கையொப்பம் பணத்தாளில் இடம்பெறவுள்ளது.

நிதி செயலாளர் தனது அறிக்கையில், “ட்ரம்ப் தலைமையில் அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத பொருளாதார வளர்ச்சியை நோக்கி செல்கிறது. டொலர் வலிமை மற்றும் நிலைத்தன்மையை கொண்டாடும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த அறிவிப்பு சட்ட ரீதியான மற்றும் அரசியல் ரீதியான விவாதங்களை எழுப்பியுள்ளது. 1866 முதல் அமெரிக்க சட்டம் உயிருடன் இருக்கும் நபர்களின் உருவம் அல்லது கையொப்பம் நாணயங்களில் இடம்பெறக்கூடாது என்று கூறுகிறது. இதனால், இந்த முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிலர் இதை “அமெரிக்காவின் வரலாற்று சாதனைகளை கொண்டாடும் நடவடிக்கை” எனக் கருதினாலும், பலர் “இது ஜனநாயகக் கொள்கைகளுக்கு முரணானது” என விமர்சிக்கின்றனர்.




