அபுதாபியில் ஏவுகணைத் தாக்குதல்: சிதறல்கள் கீழே விழுந்ததில் இருவர் உயிரிழப்பு

1 Min Read

அபுதாபியில் நடந்த ஏவுகணை தாக்குதலில் இருவர் பலியான சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அபுதாபியில் ஏவுகணை தாக்குதல்

வியாழக்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியை குறிவைத்து ஏவுகணைகள் ஏவப்பட்ட இருந்த நிலையில், அந்நாட்டின் வான் பாதுகாப்புப் படையினர் அச்சுறுத்தலாக வந்த ஏவுகணையை இடைமறித்து நடுவானிலேயே அழித்தனர்.

ஆனால் துரதிஷ்டவசமாக சுட்டு வீழ்த்தப்பட்ட ஏவுகணையின் சிதறல்கள் தரையில் விழுந்ததில் பொதுமக்கள் இரண்டு பேர் வரை கொல்லப்பட்டதாக அந்நாட்டின் ஊடக அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அபுதாபியில் ஏவுகணைத் தாக்குதல்: சிதறல்கள் கீழே விழுந்ததில் இருவர் உயிரிழப்பு | Abu Dhabi Missile Interception 2 Dead

மேலும் இந்த சம்பவத்தில் 3 பேர் வரை காயமடைந்து இருப்பதாகவும், அவர்கள் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஏவுகணை சிதறல்கள் தரையில் விழுந்தததில் சம்பந்தப்பட்ட பகுதியில் இருந்த பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

இதனை தொடர்ந்து நாட்டின் மீட்பு படையினர் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏவுகணை சிதறல் விழுந்து உயிரிழந்த பொதுமக்களின் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அதே நேரத்தில் இந்த ஏவுகணைகள் எங்கிருந்து ஏவப்பட்டது என்பது குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *