மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போருக்கான தீர்வை நோக்கி, அமெரிக்கா 15 அம்சங்களைக் கொண்ட சமரசத் திட்டத்தை ஈரானுக்கு அனுப்பியுள்ளது.
இந்தத் திட்டம் பாகிஸ்தான் அரசின் மூலம் ஈரான் அதிகாரிகளிடம் சென்றடைந்ததாக Associated Press செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

15 அம்சங்களைக் கொண்ட சமரசத் திட்டம்
ஈரானிடம் அமெரிக்கா கோரிக்கை
1. ஈரான் தற்போதுள்ள அணுசக்தி திறன்களை முற்றிலும் அகற்ற வேண்டும்.
2. ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களைத் தொடர மாட்டோம் என்று உறுதியளிக்க வேண்டும்.
3. ஈரானிய நிலப்பரப்பில் யுரேனியம் செறிவூட்டல் நடைபெறக்கூடாது.
4. ஈரான் 60 சதவீதம் செறிவூட்டப்பட்ட சுமார் 450 கிலோ யுரேனியத்தை சர்வதேச அணு ஆணையத்திடம் (IAEA) ஒப்படைக்க வேண்டும்.
5. எதிர்காலத்தில் கால அட்டவணையில் எரிசக்தி முகமைக்கு ஒப்புக் கொள்ள வேண்டும்.
6. Natanz, Isfahan மற்றும் Fordo அணுசக்தி நிலையங்கள் அகற்றப்பட வேண்டும்.
7. ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான IAEA-விற்கு, ஈரானுக்குள் முழு அணுகல், வெளிப்படைத்தன்மை மற்றும் மேற்பார்வை வழங்கப்பட வேண்டும்.
8. ஈரான் அதன் பிராந்திய பினாமி கொள்கையை (Proxy) கைவிட வேண்டும்.
9. ஈரான் அதன் பிராந்திய பினாமிகளுக்கு நிதியுதவி, வழிகாட்டுதல் மற்றும் ஆயுதம் வழங்குவதை நிறுத்த வேண்டும்.
10. ஹார்முஸ் நீரிணை திறந்திருக்க வேண்டும் மற்றும் அது ஒரு சுதந்திரமான கடல் வழித்தடமாக செயல்பட வேண்டும்.
11. ஈரானின் ஏவுகணை திட்டம் வரம்புக்குள் இருக்க வேண்டும் மற்றும் அதன் அளவு மற்றும் எண்ணிக்கை இரண்டும் மட்டுப்படுத்தப்பட வேண்டும்.
12. எதிர்காலத்தில் ஏவுகணைகளை பயன்படுத்துவது தற்காப்பிற்காக மட்டுமே இருக்கவேண்டும்.
ஈரான் பதிலுக்கு என்ன பெறுகிறது
12. சர்வதேச சமூகத்தால் விதிக்கப்பட்ட அனைத்து பொருளாதாரத் தடைகளும் முழுமையாக நீக்கப்படும்.
14. அமெரிக்கா ஈரானின் சிவிலியன் அணு திட்டத்தை முன்னேற்ற உதவி செய்யும். குறிப்பாக புஷெர் அணு நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான உதவி வழங்கப்படும்.
15. ஈரான் இணங்கத் தவறினால், snapback எனப்படும் தானாகவே தடைகளை மீண்டும் விதிக்கும் நடைமுறை நீக்கப்படும்.
ஆனால், “அமெரிக்காவின் முயற்சிகள் வெறும் அரசியல் நாடகம்” என்று விமர்சித்துள்ள ஈரான் இராணுவ செய்தித்தொடர்பாளர், தற்போது எந்தவித நேரடி பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் ஈரானின் உச்ச அதிகாரிகளிடம் எவ்வளவு பரவலாக பகிரப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரியவில்லை. மேலும், ஈரான் இதை பேச்சுவார்த்தைக்கான அடிப்படையாக ஏற்குமா என்பதும் இன்னும் உறுதியாகவில்லை.
சர்வதேச வல்லுநர்கள், “இந்தத் திட்டம் ஏற்கப்பட்டால், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் குறைய வாய்ப்பு உள்ளது. ஆனால், ஈரான் தனது அணு திட்டம் மற்றும் பாதுகாப்பு கொள்கையில் சலுகை அளிக்குமா என்பது சந்தேகமே” என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், உலகின் கவனம் ஈரான் அரசின் முடிவை எதிர்நோக்கியுள்ளது.




