இந்தியா புதிதாக 114 Rafale போர் விமானங்கள் மற்றும் 60 போக்குவரத்து விமானங்களை வாங்கவுள்ளது.
இந்திய விமானப்படையின் திறனை அதிகாரிக்கும் வகையில், 114 Dassault Rafale போர் விமானங்கள், 60 போக்குவரத்து விமானங்கள் மற்றும் AEWC அமைப்புகள் வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டம் 2026-2027-க்கும் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியா, முழுமையான நவீனமயமாக்கலை நோக்கி நகர்கிறது.
ரஃபேல் போர் விமானங்கள் இந்திய வான்படைக்கு அதிநவீன ரேடார், துல்லியமான தாக்குதல் திறன் மற்றும் மின்னணு போர் திறன்களை வழங்கும். இது, சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பிரச்சினைகள் போன்ற சவால்களை சமாளிக்க உதவும்.

போக்குவரத்து விமானங்கள் பழைய Antonov An-32 விமானங்களை மாற்றி, படைகள், ஆயுதங்கள் மற்றும் அவசர உதவிகளை விரைவாக கொண்டு செல்லும் திறனை அதிகரிக்கும்.
AEWC (Airborne Early Warning & Control) அமைப்புகள், இந்திய விமானப்படைக்கு வான்வழி கண்காணிப்பு, எதிர் விமானங்களை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் தகவல் பரிமாற்றம் போன்ற முக்கிய திறன்களை வழங்கும்.
மேலும், Dassault Aviation-னுடனான உள்ளூர் உற்பத்தி ஒப்பந்தங்கள் மூலம் Make In India திட்டத்திற்கு வலுவான ஆதரவு கிடைக்கிறது.
இந்த ஒப்பந்தங்கள் மூலம், இந்திய விமானப்படை உலகின் முன்னணி வான்படைகளில் ஒன்றாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.




