மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்.., மாதம் ரூ.17,000 கிடைக்கும்

1 Min Read

போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டங்களில் முக்கியமான ஒரு திட்டம் தான் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS).

இத்திட்டம் ஓய்வுக்கு பின் நிலையான வருமானம் தரும் பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்பாக உள்ளது.

தற்போது இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது. இது சாதாரண வங்கி FDகளை விட அதிகமாகும்.

இந்த திட்டத்தை ரூ.1,000 முதலீட்டுடன் தொடங்கி அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்ய அனுமதி உள்ளது.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்.., மாதம் ரூ.17,000 கிடைக்கும் | Post Office Senior Citizen Savings Scheme

மேலும், வருமான வரிச் சட்டம் பிரிவு 80C கீழ் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு கிடைக்கும்.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தில் சேரலாம். VRS மூலம் ஓய்வு பெற்றவர்கள் (55 வயதுக்கு மேல்) மற்றும் பாதுகாப்புத் துறை ஓய்வுபெற்றவர்கள் (50 வயதுக்கு மேல்) சிறப்பு தளர்வுடன் சேர அனுமதிக்கப்படுகின்றனர்.

60 வயதுக்கு மேற்பட்ட எவரும் தங்கள் மனைவியுடன் கூட்டுக் கணக்கைத் திறக்கலாம்.

இந்த திட்டத்தின் காலவரை 5 ஆண்டுகள். வட்டி 3 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும்.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்.., மாதம் ரூ.17,000 கிடைக்கும் | Post Office Senior Citizen Savings Scheme

அவசர தேவைக்காக முன்கூட்டியே பணத்தை எடுத்தால் அபராதம் விதிக்கப்படும். கணக்கு வைத்திருப்பவர் இறந்தால், தொகை நாமினிக்கு வழங்கப்படும்.

உதாரணமாக, ரூ.25 லட்சம் முதலீடு செய்தால், 8.2% வட்டியில் ஒவ்வொரு 3 மாதத்திற்கும் ரூ.51,250 கிடைக்கும். இதனால் மாதத்திற்கு சுமார் ரூ.17,000 வருமானம் பெறலாம்.

5 ஆண்டுகள் முடிவில், முதலீட்டு தொகையை திரும்பப் பெறலாம் அல்லது மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கலாம்.

மேலும், முதலீடு செய்தபோது நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதம் முழு காலத்திற்கும் நிலையாக இருக்கும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *