ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான பயணம்: பிரித்தானியா, பிரான்ஸ் வெளியிட்ட அறிவிப்பு

1 Min Read

ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான பயணத்திற்கு ஒத்துழைப்பு தருவதாக பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் அறிவித்துள்ளது.

டிரம்பின் குற்றச்சாட்டு

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் 20 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த போர் நடவடிக்கைக்கு மத்தியில் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது. இதனால் சர்வதேச அளவில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான பயணம்: பிரித்தானியா, பிரான்ஸ் வெளியிட்ட அறிவிப்பு | Uk France Ready To Contribute Hormuz Safe Passage

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் வர்த்தகத்தை உறுதிப்படுத்துவதற்காக நேட்டோ நாடுகள் தங்கள் போர் கப்பலை இப்பகுதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்து இருந்தார்.

ஆனால் இதற்கு நேட்டோ நாடுகள் மறுப்பு தெரிவித்த நிலையில்,  ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பதில் நேட்டோ நாடுகள் உதவ மறுப்பது முட்டாள்தனமானது என்று டிரம்ப் குற்றம்சாட்டினார்.

பிரித்தானியா, பிரான்ஸ் நாடுகள் தயார்

இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பதில் ஒத்துழைப்பு வழங்க பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தயாராக இருப்பதாக வாஷிங்டனில் உள்ள பிரித்தானிய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான பயணம்: பிரித்தானியா, பிரான்ஸ் வெளியிட்ட அறிவிப்பு | Uk France Ready To Contribute Hormuz Safe Passage

சர்வதேச வர்த்தக கப்பல் போக்குவரத்தில் ஏற்படும் தடைகள் மற்றும் உலகளாவிய எரிசக்தி துறையை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் போக்குவரத்து சுதந்திரம் என்பது சர்வதேச சட்டத்தின் அடிப்படை கொள்கை, ஈரானின் தற்போதைய நடவடிக்கை உலகின் நலிவடைந்த மக்களால் உணரப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *