பிரித்தானிய நகரமொன்றில் பரவும் பயங்கர மூளைக்காய்ச்சலுக்கு பதின்மவயதினர் இருவர் பலியாகியுள்ள நிலையில், அவர்களில் ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய நகரமொன்றில் பரவும் மூளைக்காய்ச்சல்
இங்கிலாந்திலுள்ள Canterbury நகரில், இரண்டுபேர் மெனிஞ்சைட்டிஸ் (meningitis) என்னும் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில், அவர்களில் ஒருவரின் பெயர், புகைப்படம் முதலான விவரங்கள் வெளியாகியுள்ளன.

Canterbury நகரில், Club Chemistry என்னும் இரவு விடுதி ஒன்று உள்ளதாம். மாணவர்களிடையே பிரபலமான அந்த விடுதிக்குச் சென்ற, பாதிக்கப்பட்ட யாரிடமிருந்தோ இந்த மூளைக்காய்ச்சல் பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது.
ஆகவே, அந்த பகுதியிலுள்ள மாணவ மாணவியருக்கும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் ஆன்டிபயாட்டிக்குகள் விநியோகிக்கப்பட்டுவருகின்றன.
உயிரிழந்த இளம்பெண் இவர்தான்
மூளைக்காய்ச்சலுக்கு பலியானவர்களில் ஒருவர், ஜூலியட் (Juliette, 18) என்னும் மாணவி என தெரியவந்துள்ளது.

ஜூலியட், Queen Elizabeth’s Grammar School என்னும் பள்ளியில் படித்துவந்த நிலையில், அவரது மரணம் குறித்து அவரது பள்ளி ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளார்கள்.
ஜூலியட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமையன்று, தன் குடும்பத்தினர் சூழ்ந்திருக்க அவரது உயிர் பிரிந்ததாக அவரது தாய் தெரிவிக்கிறார். உயிரிழந்த இன்னொரு நபர் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.




